states

img

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கேரளத்தில் அமல்படுத்த முடியாது!

திருவனந்தபுரம், பிப். 3 - குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை கேரளத்தில் அமல்படுத்த முடியாது என்ற இடது ஜனநாயக முன்னணி அரசின் முந்தைய நிலைபாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் பின ராயி விஜயன் திட்டவட்டமாக கூறியுள்ளார். திருவனந்தபுரம் அய்யன் காளி மண்டபத்தில் ‘தேசாபி மானி நாளிதழ்’ சார்பில்  இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விருது களை வழங்கி முதல்வர் பின ராயி விஜயன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிவில் சமூகத்தின் ஒரு பிரிவினரை வெளியேற்ற வழி வகுக்கும் குடியுரிமை திருத்தச்  சட்டம் கேரளத்தில் அமல்படுத் தப்படாது. கேரளத்தில் உள்ள இடது ஜனநாயக முன்னணி (எல்.டி.எப்) அரசு, சட்டத்திருத்தம் நடந்த உடனேயே அதை செயல்படுத்தாது என்று அறி வித்தது. இன்னும் அதே நிலைப் பாட்டில்தான் அரசு உள்ளது. அதிகாரமும் புரோகிதமும் சேர்ந்தால் நாட்டில் எத்தகைய அழிவுகள் ஏற்படும் என்பதற்கு நமது வரலாற்றில் உதாரணங்கள் உள்ளன.

அந்த பழமையான காலத்திற்கு நாட்டை இட்டுச் செல்லும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதற்கு எதிராக வெளிப் படையாக எழுதவும், துணிச்சலு டன் பதிலளிக்கவும் ஒரு சில ஊட கங்கள் மட்டுமே தயாராக உள்ளன. அந்த அரிய ஊடகத் தில் ‘தேசாபிமானி’ மிக முக்கி யமான இடத்தில் நிற்கிறது. தேசாபிமானி அந்த அரசியல் பாரம்பரியத்தை வலுப்படுத்தி முன்னேற முடியும். மலையாள இலக்கியம், எப்பொழுதும் மனித நேயத்தை நோக்கியது. இதை வலுப்படுத் தும் வரலாறு ‘தேசாபிமானி’க்கு உண்டு. அந்த வரலாற்றின் தொடர்ச்சிதான் ‘தேசாபிமானி விருது’.

இந்த விருது, பச்சை- மஞ்சள்- சிவப்பு என்கிற புதி னத்துக்கு கிடைத்துள்ளது.  1995-ஆம் ஆண்டு சேலம் அருகே நடந்த ரயில் விபத்தை  அடிப்படையாகக் கொண்ட இந்த புதினத்தை டி.டி. ராமகிருஷ்ணன் படைத்துள்ளார். இந்திய ரயில்வேயின் வரலாற்றையும் நிகழ்காலத்தையும் நமக்குக் காட்டுகிறது இந்த புதினம்.

கவி தைக்கான விருது வென்ற விஷ்ணு பிரசாத், மனித நிலை களை மையமாகக் கொண்ட கவிதைகளைப் படைத்துள்ளார். சிறு கதைக்கான விருதுபெற்ற வி.கே. தீபாவின் கதைகள் யதார்த்தமும் கற்பனையும் கலந்த கதைகள் ஆகும். இவ்வாறு முதல்வர் பின ராயி விஜயன் கூறினார்.