திருவனந்தபுரம்:
எதிர்காலத்தில் கேரளாவை வலிமையாக்கும் நோக்கில் முதல்வர் பினராயி விஜயன் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் டிசம்பர் 22 ஆம் தேதி கொல்லத்தில் இருந்து தொடங்கும். அந்தந்த மாவட்டங்களில் உள்ளஅனைத்து தரப்பு மக்களுடன் முதல்வர் உரையாட உள்ளார்.
இதுகுறித்து எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரள மக்களில் அதிக அனுபவமுள்ளவர்களுடன் உரையாடுவதன் மூலம் கேரளாவின் எதிர்காலத்திற்கான இடது ஜனநாயக முன்னணியின் பார்வையை உருவாக்குவதே இந்த சுற்றுப்பயணத்தின் நோக்கம்.
சுற்றுப்பயண விவரம்:
டிசம்பர் 22 காலை 10.30 மணிக்கு கொல்லம். மாலை 4 மணிக்கு பத்தனம்திட்டா.
டிச 23 மாலை 4 மணி கோட்டயம்.
டிசம்பர் 24 மாலை 4 மணி திருவனந்தபுரம்.
டிச 26 காலை 10.30 மணி கண்ணூர். மாலை 4 மணி காசர்கோடு.
டிச 27 காலை 10.30 மணி கோழிக்கோடு, மாலை 4 மணி வயநாடு.
டிச 28 காலை 11.30 மணி மலப்புறம், மாலை 4 மணி பாலக்காடு.
டிச 29 காலை 10.30 மணிக்கு திருச்சூர்.
டிச 30 காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் மாலை 4 மணி ஆலப்புழா