states

img

பெண்கள் கல்வியும் அதிகாரமும் பெற்ற கேரளம்

திருவனந்தபுரம், மார்ச் 18- கேரளத்தில் பெண்கள் அதிகம் படித்தவர் களாகவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் உள்ளனர். நாட்டிலேயே சிறந்த பெண்-ஆண் விகிதத்தைக் கொண்டுள்ள கேரளம். இது பெண்கள் உட்பட அதிக கல்வியறிவு விகி தத்தையும் எட்டியுள்ளது என கேரளத்துக் கான தனது முதல் பயணத்தில் குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு பாராட்டினார். கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த குடிமக்கள் வரவேற்பைப் பெற்றுக் கொண்டு குடும்பஸ்ரீயின் ‘ரச்சனா’ உள்ளிட்ட திட்டங்களைத் தொடக்கி வைத்த பின்னர் ஜனாதிபதி உரையாற்றினார். அப்போது அவர்  மேலும் கூறுகையில், கேரளாவின் நல்ல செயல்திறன் பல மனிதாபிமான குறியீடுகளில் பிரதிபலிக்கிறது என சுட்டிக்காட்டினார். தாய் வழி சுகாதாரத்தை மேம்படுத்துவதிலும், குழந்தை  இறப்பைக் குறைப்பதிலும் கேரளம் சிறப்பா கச் செயல்படுகிறது. இங்கு பெண்கள் அதிகம்  படித்தவர்களாகவும், அதிகாரம் பெற்றவர் களாகவும் உள்ளனர். பெண்களுக்கு அதிகார மளிக்கும் இந்த மாபெரும் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் வகையில், குடும்பஸ்ரீ உல கின் மிகப்பெரிய பெண்கள் சுய உதவி வலை  அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது என் றார். நாட்டிலேயே பல்வேறு துறைகளில் கேரள பெண்கள் முதன்மை பெற்று சாதனை படைத்  துள்ளனர். நாஞ்சியம்மாவுக்கு தேசிய விருது கொடுக்கும் நல்வாய்ப்பு கிடைத்தது.

இந்த  ஆண்டு கேரளாவின் குடியரசு தின அணி வகுப்பு அட்டவணையில் ‘நாரீசக்தி’ (பெண் சக்தி) காட்சிப்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது. பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான பிரகாசமான எடுத்துக்காட்டுகளை கேரளா வில் வெவ்வேறு காலகட்டங்களில் காணலாம்.  உன்னியார்ச்சா, நங்கேலி, அம்மு சுவாமி நாதன், தாக்சாயணி வேலாயுதன், அன்னி மஸ்கிரீன், உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி  அன்னா சாண்டி, உச்ச நீதிமன்றத்தின் முதல்  பெண் நீதிபதி, எம்.பாத்திமா பீவி, 96 வயதில்  முதியோர் கல்வியில் முதல் தரப் பெண்  கார்த்யாயணியம்மா போன்றவை முன்மாதிரி யான எடுத்துக்காட்டுகள். வீடு கட்டித்தருதல், சுகாதாரம், கல்வி, வாழ்  வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற துறைகள் மூலம் மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் நலனுக்கு அதிக முன்னு ரிமை அளிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. யுனெஸ்  கோவின் உலகளாவிய கல்வி ஆய்வுப் பகுதி யில் உள்ள மூன்று இந்திய நகரங்களில் நிலம்பூ ரும் திருச்சூரும் கேரளத்தில் உள்ளன. இது விரி வான- தரமான கல்விக்கான கேரளாவின் தெளி வான உறுதிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற் கான அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடு  என்று கேரளா பெருமை கொள்ளலாம் என்று  குடியரசுத் தலைவர் கூறினார்.