states

img

வெளிநாட்டினர் சமர்ப்பிக்கும் அனைத்து பரிந்துரைகளும் செயல்படுத்தப்படும்

நியூயார்க், ஜுன் 11 உலக கேரளா சபையில் வெளிநாட்டினர் சமர்ப்பித்த அனைத்து பரிந்துரைகளையும் கேரள அரசு செயல்படுத்தும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள மேரியட் மார்க்வே ஹோட்டலில் உலக கேரள சபையின் அமெரிக்க பிராந்திய மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். கடந்த கேரள பிராந்திய மாநாட்டில் எழுப்பப்பட்ட பரிந்துரைகளை தலைமைச் செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு செய்தது. 67 நடைமுறை பரிந்துரைகள் கண்டறியப்பட்டன.  இதில் 11 பிரச்சனைகள் ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 56 பரிந்துரைகள் பல்வேறு துறைகளின் பரிசீலனையில் உள்ளன. பரிந்துரைகளை கையாள துறைகளில் துணை மற்றும் துணை செயலாளர்கள் நோடல் அதிகாரி களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய்த்துறை தொடர்பான வெளி நாட்டினரின் பிரச்சனைகளை தீர்க்க பிரவாசி  மித்ரம் என்ற வலைத்தளம் தொடங்கப் பட்டுள்ளது. வெளி மாநிலத்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அலுவலகமும் அமைக்கப் பட்டுள்ளது.  

புலம்பெயர்ந்தோரின் தகவல் சேகரிப்புக் கான டிஜிட்டல் தரவு தளத்தை உருவாக்கும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இதை டிஜிட்டல் பல்கலைக்கழகமும் நோர்காவும் இணைந்து செயல்படுத்துகிறது. வெளி நாட்டினருக்கான விரிவான காப்பீட்டுத் திட்டமும் இறுதிக் கட்டத்தில் உள்ளது. கேரளாவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அனைத்து கேரள மக்களின் ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை  அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், வெளிநாட்டுத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐந்து மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  பிரவாசி பாரத திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 14,166 தொழில் நிறுவனங்கள் தொடங்கப் பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் தலைமை வகித்தார்.