திருவனந்தபுரம், ஆக.31- அரசின் உதவியோடு வான ளாவ ‘பறந்தவர்கள்’ நன்றி தெரி விக்க சட்டசபைக்கு வந்தனர். அர சின் நிதி உதவியுடன் ஏர்லைன் மற் றும் ஏர்போர்ட் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்தவர்கள் அவர்கள். முதல்வர் பினராயி விஜயன், சபா நாயகர் எம்.பி.ராஜேஷ், அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60 மாணவர்கள் பேர வைக்கு வருகை தந்தனர். 160 பேர், பட்டியல் பழங்குடியினர் மேம் பாட்டுத் துறையின் உதவித் தொகையுடன் படிப்பில் உள்ள னர். ஆறு மாத படிப்பை முடித்த 93 பேருக்கும், ஓராண்டு படிப்பை முடித்த 11 பேருக்கும் பல்வேறு விமான நிறுவனங்களில் வேலை கிடைத்தது. கடந்த ஆண்டு, பட்டியல் சாதியைச் சேர்ந்த 28 பேருக்கு வேலை கிடைத்தது. வயநாட்டில் உள்ள டிரீம் ஸ்கை ஏவியேஷன் பயிற்சி அகாட மியில் தனது படிப்பை இவர்கள் முடித்தனர். மாணவிகள் வரைந்த முதல்வர் மற்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உருவப்படங்கள் இருவரிடமும் வழங்கப்பட்டன. ஐஎம்ஜி அரங்கில் அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் மாணவர் களுக்கு சான்றிதழ்களை வழங்கி னார்.