states

img

இரண்டு ஆண்டுகளில் 114 வழக்குகள் பதிவு

திருவனந்தபுரம், ஆக.21-   கேரளத்தில் ஊழல் மற்றும் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) துறை யும் கடும் நடவடிக்கை எடுத்து வரு கின்றன. கடந்த இரண்டு ஆண்டு களில் பல்வேறு துறைகளில் ஊழல் செய்தவர்கள் மீது 114 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் 118 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். ஊழல் தடுப்புச் சட்டத்தை கடுமையாக்கி ஊழல்வாதிகளைக் கையாள்கிறது கேரள  விஜிலென்ஸ். பொதுமக்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணை, மின்னல் சோதனை மற்றும் பொறிகள் மூலம்  வழக்குகள் பதிவு கையாளப்படு கின்றன. தேவையான இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநிலத்தின் பெரும்பாலான துறைகளில் உள் கண்காணிப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிதியை முறைகேடாக பயன் படுத்தியதாக புகார் எழுந்தால், உள் கண்காணிப்பு பிரிவு முதற்கட்ட விசாரணை நடத்தும். குற்றச்சாட்டு உண்மை என கண்டறியப்பட்டால், அது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (விஜிலென்ஸ்) துறையிடம் ஒப்படைக்கப்படும். பெரும்பாலான வழக்குகள் (33) வருவாய்த் துறையில் பதிவு செய்யப் பட்டுள்ளன.  உள்ளாட்சி அமைப்பு களில் 26 வழக்குகளும், சுகாதாரத் துறையில் 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் பதிவுத் துறைகளில் தலா 6 வழக்குகள் உள்ளன. கேரளாவை ஊழலற்ற நாடாக மாற்றும் நோக்கில் விஜிலென்ஸ் துறை வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஊழல்வாதிகளை சிக்க வைப்ப தற்கான ஆதாரங்கள் விரிவுபடுத்தப் பட்டுள்ளதாகவும், இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் விஜி லென்ஸ் தலைவர் டி.கே.வினோத் குமார் தெரிவித்தார். அதிகளவிலான சோதனைகளால், ஊழல்வாதிகள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்றனர். ஊழல், லஞ்சம் போன்றவற்றை பொதுமக்கள் கவனித்தால் 1064 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.