states

img

பரதநாட்டியம் ஆடி திரட்டிய நிதியை கேரள முதல்வரிடம் ஒப்படைத்த தமிழக சிறுமி

பரதநாட்டியம் ஆடி வயநாடு மக்களுக்காக திரட்டப்பட்ட நிதி மற்றும் தனது சேமிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைத்த சிறுமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நிவாரண உதவிகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஹரிணி 3 மணி நேரம் பரதநாட்டியம் ஆடி திரட்டப்பட்ட நிதி மற்றும் தான் சேமித்து வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயை முதல்வர் பினராயி விஜயனிடன் வழங்கினார். சிறுமி தான் நடனம் ஆடிய காணொலியை முதல்வரிடம் காண்பித்தார். முதல்வர் பினராயி விஜயனை சிறுமி ஹரிணி சந்தித்த காணொலி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுமியின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.