திருவனந்தபுரம், ஜூன்13- கேரள அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க 48வது ஆண்டு மாநாடு கடந்த 7,8 தேதிகளில் திருவனந்தபுரம் ஏ.கே.ஜி.அரங்கில் நடைபெற்றது. மாநாட்டில் வேலைநிறுத்த உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் தேவை என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 8ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு தலைமைச் செயலக வளாகத்திலிருந்து ஏ.கே.ஜி.அரங்கை நோக்கி ஊழியர்களின் பேரணி நடைபெற்றது. பொதுமாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். மாநாட்டில் சங்கத்தின் தலைவராக பி.ஹணி, பொதுச் செயலாளராக கே.என்.அசோக்குமார், பொருளாளராக அஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.