கொச்சி, ஜன.24- நடிகை பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசா ரணை நடத்தும் அதிகாரி களுக்கு ஆபத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப் மற்றும் குற்றம்சாட்டப் பட்டுள்ளவர்களிடம் இரண் டாவது நாளான திங்க ளன்று குற்றப்பிரிவு அலுவ லகத்துக்கு விசாரணைக் காக திலீப் வந்தடைந்தார். முதல் நாளில் 11 மணி நேர விசாரணைக்கு பிறகு திலீப்பை குற்றப்பிரிவு போலீசார் விடுவித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து, குற்றம் சாட்டப் பட்டவர்களிடம் ஞாயிற்றுக் கிழமை முதல் செவ்வாய் வரை 33 மணி நேரம் விசா ரணை நடத்தப்படும். திலீப்பின் சகோதரர் அனூப், மைத்துனர் சூரஜ், ஓட்டுநர் அப்பு, நண்பர் பைஜு செங்கமாநாடு ஆகி யோரிடமும் களமச்சேரி குற்றப்பிரிவு அலுவல கத்தில் விசாரணை நடத்தப் பட்டது. இயக்குநர் பி. பாலச்சந்திரகுமார் தெரி வித்த தகவல் அடிப்படை யில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு கண்காணிப்பா ளர் எம்.பி.மோகனச்சந்திரன் தலைமையில் விசாரணை நடைபெற்றது.