states

ஊட்டச்சத்து குறைபாடு தீவிரம்

குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் மரணங்கள் அதிகரித்து வருகின்றன எனத் தெரி யவந்துள்ளது.

 கடந்த மூன்று ஆண்டுகளில், குஜராத்தில் கடுமையான ஊட்டச்  சத்து குறைபாட்டால் பாதிக்கப்  பட்ட 41,632 குழந்தைகள் ஊட்டச் சத்து மறுவாழ்வு மையத்தில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக மக்களவை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் ஒன்றிய அரசு வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, குஜராத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள்  கடுமையான ஊட்டச்சத்து குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழந்தைகள் மருத்து வச் சிக்கல்களுடன் கிராமங்களில் இருந்து ஆஷா மற்றும் அங்கன் வாடி பணியாளர்களால் பரிந்து ரைக்கப்பட்டு, ஊட்டச்சத்து மறு வாழ்வு மையங்களில் அனுமதிக் கப்படுகின்றன. 

வெள்ளிக்கிழமை மக்களவை யில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினர்கள் தனுஷ் எம்.  குமார், ஜி.செல்வம் ஆகியோரின் கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய  சுகாதார அமைச்சகம், 29 மாநிலங்க ளில் உள்ள ஊட்டச்சத்து மறு வாழ்வு மையங்களில் அனுமதிக் கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2020-21-இல் 1.04 லட்சம், 2021-22-இல் 1.32 லட்சம், 2022-23-இல் 1.89 லட்சம், 2023-ஆம் ஆண்டு ஜூன் வரை 0.56 லட்சம் எனத் தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் குஜராத் மாநிலம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது;  கடந்த மூன்று ஆண்டுகளில் கடுமை யான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இரட்  டிப்பாகியுள்ளது என, அந்தப் பதில்  மூலம் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, குஜராத் காங்  கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன்  பேங்கர், “குஜராத்தில் ஆண்டுக்கு  சராசரியாக 12 லட்சம் குழந்தைகள்  பிறக்கின்றன, அதில் இன்றும் ஆண்  டுக்கு 30 ஆயிரம் குழந்தைகள்  இறக்கின்றன. இது ஒரு யதார்த்  தம். கடந்த ஐந்தாண்டுகளில், அர சாங்கத்தின் புள்ளிவிவரங்களின் படி, 7,15,515 குழந்தைகள் ஊட்டச்  சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட் டுள்ளனர். குஜராத்தில், ஐந்து  வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக் கான குழந்தைகள், தாயின் மடி யில் வளர்ந்து, இயற்கையான ஊட்  டச்சத்தை பெறுவதற்குப் பதிலாக,  ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்க ளில் சேர்க்கப்படும் நிலை ஏற்பட் டுள்ளது” என்று கூறினார்.

குஜராத் இரண்டாமிடம்
இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் சுகாதாரக் கொள்கைகள் மற்  றும் திட்டங்களை வலுப்படுத்தும் தரவுத்தளத்தின் அடிப்படையில், வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் அடிப்படையில் குஜராத் நான்கா வது இடத்தில் உள்ளது, மாநிலத் தில் 39 சதவீத குழந்தைகள் தங்கள்  வயதுக்கு உரிய எடையில்லாமல் எடை குறைவாக உள்ளனர். எடை  குறைவாக பிறக்கும் குழந்தை களின் சதவீதம் குஜராத்தில் 39.7  ஆக உள்ளது இந்தியாவில் குஜ ராத் இரண்டாவது இடத்தில் உள்  ளது. இது குஜராத்தின் செயல்திற னில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

“பழங்குடியினர், கடலோர, உப்பளம் மற்றும் மலைப்பகுதி களில் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவது ஒரு பிரச்ச னையாக உள்ளது, சில சமூகங்க ளில் குழந்தை திருமணமும் குழந்  தைகள், குறிப்பாக பெண்கள்,  இடைநிற்றலுக்கு பங்களிக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தை மேம் பாட்டு சேவை பணியாளர்கள், தனி யார் பாலர் ஆசிரியர்களின் குறைந்த தகுதி, போதிய கண்காணிப்பு அமைப்பு மற்றும் தரவுகள் கிடைக்  காததால், ஒவ்வொரு குழந்தைக் கும் தரமான குழந்தைப் பருவக் கல்வியை உறுதி செய்வது சவா லாக உள்ளது.

குஜராத்தில் குழந்தை திரு மணம் இன்னும் அதிகமாக உள் ளது. ஏழைக் குடும்பங்களில் உள்ள  பெண் குழந்தைகள், விரைவில்  திருமணம் செய்து கொள்வ தற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம். 20-24 வயதுடைய பெண்  களில் 24.9 சதவீதம் பேர் சட்டப் பூர்வ வயது 18 வயதிற்கு முன்பே  திருமணம் செய்து கொண்டுள்ள னர்” என்கிறது.

அதே நேரத்தில் இந்தியாவின் மக்கள்தொகை மற்றும் சுகாதா ரக் கொள்கைகள் மற்றும் திட்டங்  களை வலுப்படுத்தும் தரவுத்தளம்- 4-இன் தகவலை மேற்கோள்காட்டி, யுனிசெப்-இந்தியா தரவுத் தளம் பின்  வரும் தகவல்களைத் தந்துள்ளது.