states

img

குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி மீண்டும் கைது

குஜராத் மாநில எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
மோடி குறித்து  டுவிட்டரில் விமர்சித்து பதிவிட்டதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார் டே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில்,  கடந்த  20 ஆம் தேதி ஜிக்னேஷ் மேவானியை  நள்ளிரவில் அசாம் மாநில காவல்துறை கைது செய்து அழைத்து சென்றது.  இரு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் அவமதித்தல், சதிச் செயல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. 
இதனிடையே, அசாம் நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. அவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில், தற்போது மீண்டும் அசாம் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜிக்னேஷ் மேவானி, "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சதி காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன். திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கையில்  அவர்கள் ஈடுபடுகின்றனர். ரோகித் வெமுலா மற்றும் சந்திரசேகர் ஆசாத்திற்கு இதேபோன்று நடந்தது. தற்போது என்னை குறிவைத்துள்ளனர்" என்றார்.