குஜராத், ஜூலை 26- குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 28 பேர் பலியாகினர். பூரண மதுவிலக்கு அமலில் உள்ள தாக கூறப்படும் பாஜக ஆளும் மாநில மான குஜராத்தில் நிகழ்ந்துள்ள இச்சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பொடாட், பாவ்நகர் மற்றும் அகமதா பாத் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பல ரது நிலைமை கவலைக்கிடமாக இருப்ப தாகவும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரி விக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அமித் சாவ்தா கூறுகையில், கொள்ளைக் காரர்கள் மற்றும் காவல்துறையினரின் தொடர்பு மற்றும் மாநில பாஜக தலை வர்கள் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது. காவல்துறையினர் சாராய வியாபாரிகளிடமிருந்து மாதம் தோறும் லஞ்சம் வாங்குவது வழக்கம் என்று தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடுகிறது என்பதை இந்த பலிச்சம்பவங்கள் காட்டுகின்றன என்று அரசியல் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.