states

img

நீதிபதி மீது செருப்பு வீசிய குற்றவாளி  

குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி மீது செருப்பை வீசி குற்றவாளியால் நீதிமன்ற வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.    

குஜராத் மாநிலம் சூரத்தில் கடந்த ஏப்ரல் மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளியின் 5 வயது மகள் சாக்லேட் வாங்கி தருவதாக ஏமாற்றி கடத்தி சென்றவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். இது தொடர்பாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சூரத் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசு தரப்பின் 26 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மற்றும் 53 ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.  

இந்த தீர்ப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த குற்றவாளி, தனது செருப்புகளை கழற்றி, நீதிபதியை நோக்கி வீசினார். ஆனால் அந்த செருப்புகள் நீதிபதி மீது விழவில்லை. சாட்சி கூண்டின் அருகே விழுந்தன. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.