states

img

சூரத் அருகே பேருந்தில் திடிரென தீ விபத்து: பெண் பயணி உடல் கருகி பலி

குஜராத் மாநிலம், சூரத் அருகே தனியார் சொகுசு பேருந்து ஒன்று திடிரென தீப்பற்றி எரிந்ததில், பேருந்தில் பயணித்த ஒருவர் உடல்கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாயன்று இரவு சுமார் 15 பயணிகளுடன் கதிர்காம் பகுதியில் இருந்து பாவ்நகர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து, வராச்சா பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

உடனடியாக பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கி உயிர்தப்பிய நிலையில், ஒரு பெண்ணும், ஆணும் பேருந்தில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதில், ஆண் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், பேருந்தின் இன்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால், ஏசி கம்பிரஸர் வெடித்து வாகனம் முழுவதும் தீப்பற்றியதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;