1960 மே 1-ஆம் தேதி குஜ ராத் மாநிலம் உருவா னது. மகாத்மா காந்தி பிறந்த மண் (மாநிலம்) என்ற சிறப் பிற்காக குஜராத் மாநிலம் உருவான தினத்தில் இருந்து அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு மதுவிலக்கு கொள்கையை அறிவித்தது. தற்பொ ழுது வரை மதுபானங்களின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் நுகர்வு ஆகியற்றிற்கான தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், காந்திநக ரில் உள்ள “இண்டர்நேஷனல் பைனான்ஸ் டெக்-சிட்டியில் (GIFT City - கிப்ட் சிட்டி)” உலகளாவிய வணிக சூழலை வழங்கும் முயற்சி என்று கூறி, குஜராத் பாஜக அரசு வெள்ளியன்று கிப்ட் சிட்டி பகுதியில் மட்டும் மதுவிலக்கு கொள்கை மீதான தடையை நீக்கி யுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உலகளாவிய வணிக சூழலை உருவாக்கவும், வெளி நாடுகளில் இருந்து வருகை தருவோ ருக்கான விருந்தோம்பல் அடிப்படை யில் கிப்ட் சிட்டிக்கு மதுவிலக்கு கொள்கையில் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது என அம்மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 63 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ள நிலையில், வரு மானத்திற்காக ஒரே ஒரு பகுதிக்கு மதுவிலக்கு கொள்கைகயை சுக்கு நூறாக நொறுக்கிய பாஜக அரசுக்கு பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தி லேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
எங்களுக்கும் விலக்கு வேண்டும்
கிப்ட் சிட்டிக்கு மதுவிலக்கு கொள் கையில் இருந்து விலக்கு அளித்து இருப்பது போல எங்களுக்கும் விலக்கு வேண்டும் என இதர தொழில் வளர்ச்சி நகரங்களும் அனுமதி கோரி வருகின்றன. முக்கியமாக அண்மை யில் பிரதமர் மோடி திறந்து வைத்த பிரம்மாண்ட வைர வர்த்தக நிலைய மும் மதுவிலக்கில் இருந்து விலக்கு தருமாறு கோரியுள்ளதால், குஜராத் பாஜக அரசு சிக்கலில் விழித்து வரு கிறது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
கிப்ட் சிட்டிக்கு மது அனுமதி அளித் ததற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “மகாத்மா காந்தி மற்றும் வல்லபாய் படேல் பெயரில் ஆட்சி நடத்தும் பாஜக வின் பேச்சு ஒன்றாகவும் செயல் வேறா கவும் உள்ளது” என காங்கிரஸ் குற் றம்சாட்டி உள்ளது.
மேலும் கடந்த மாதம் மணிப்பூர் மாநிலத்தில் 32 ஆண்டுகாலமாக கடைப்பிடித்து வந்த மதுவிலக்கு கொள்கையை அம்மாநில பாஜக அரசு நீக்கியதற்கு வறுபட்டது போல, தற்பொழுது குஜராத் சம்பவத்திற்கும் பாஜக வறுபட்டு வருகிறது. மது விலக்கு கொள்கையை பற்றி பேசவே மதிப்பில்லாத கட்சி பாஜக என தமிழ் நாடு நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் விமர்சித்து வருகின்றனர்.
அடையாளத்தை இழக்கும் குஜராத்
“மகாத்மா காந்தி பிறந்த மண்” என்ற ஒற்றை பெருமித வர லாறுடன் குஜராத் மாநிலம் விடாப் பிடியாக கடந்த 63 ஆண்டுகளுக்கு மேலாக மதுவிலக்கு கொள்கை யை கடைப்பிடித்து வருகிறது. இத னால் இந்தியாவில் மதுவிலக்கு பற்றி பேசினால் குஜராத் என்ற வார்த்தை முதலாவதாக இருக் கும். அங்கு கள்ளச்சாராயச் சாவு கள் அவ்வப்போது நடைபெறுவது தனிக்கதை. ஆயினும, மது விலக்கு கொள்கையை கடைப் பிடிக்காத மாநில மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் குஜராத் மாநி லத்தை போன்று மதுவிலக்கு அமல்படுத்துங்கள் என்று கோரிக்கை விடுப்பார்கள். அந்தளவுக்கு குஜராத் மாநிலமும், மதுவிலக்கு கொள்கையும் ஒரு உறவு பிணைந்து இருந்த நிலை யில், கிப்ட் சிட்டி பகுதியில் மட்டும் மதுவிலக்கு கொள்கை மீதான தடையை நீக்கியுள்ளது மூலம் தனி அடையாளத்தை இழக்கிறது குஜராத் மாநிலம்.