குஜராத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத்திலிருந்து 235 கி.மீ தொலைவில் உள்ள குஜார் பரூச்சில் அமைந்துள்ள தஹேஜ் தொழில்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக உலை வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்து 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.