states

img

பெங்களூரு: ஹோலி கொண்டாட்டத்தில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணப்பொடிகளை பயன்படுத்த தடை

பெங்களூருவில் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ண பொடிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 
நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெங்களூரு பகுதியில் விலங்குகள் மீது வண்ணப்பொடிகளை பூச தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
 இதுபற்றி கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள விலங்குகள் மற்றும் கால்நடை துறையின் துணை இயக்குனர் வெளியிட்டு உள்ள செய்தியில், ரசாயன அல்லது இயற்கை வண்ண பொடிகள் விலங்குகளின் தோல், வாய், கண் அல்லது மூக்கு வழியாக அவற்றின் உடலுக்குள் செல்ல முடியும்.
இதனால், ஒவ்வாமை, வாந்தி மற்றும் பார்வை இழப்பு ஆகியவையும் ஏற்பட கூடும்.  விலங்குகளின் சுகாதாரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய இதுபோன்ற வண்ணங்களை பூசாமல் தடுக்கும்படி பொதுமக்களிடம் நான் கேட்டு கொள்கிறேன்.  தவிர, விலங்குகள் கொடுமை சட்டம், 1960ன்படி இது சட்டவிரோதம் எனவே விலங்குகளின் மீது வண்ண பொடிகளை பூசுவது, தூவுவது போன்ற சம்பவங்கள் நடப்பது அறியப்பட்டால், இந்த சட்டத்தின் விதிகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.