states

img

கர்நாடகா:மணமேடையில் பெண் உயிரிழந்த சோகம் 

கர்நாடகாவில் மணப்பெண் மேடையில் மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த சைத்ரா (26) என்ற பெண்ணிற்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் நின்றிருந்த சைத்ரா திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பெண்ணை மீட்டு உடனடியாக  மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவடைந்து விட்டதாகக் கூறினர்.
திருமணத்தின் போதே எதிர்பாராத விதமாக மகள் உயிரிழந்ததால் வேதனையடைந்த பெற்றோர் இறுதியாக பெண்ணின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். 
இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக மாநில அமைச்சர் சுதாகர், பெற்றோரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவர்களது இந்த முடிவுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.