கர்நாடகாவில் தேசிய கொடி ஏற்ற வேண்டிய இடத்தில் காவிக்கொடியை ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியகூடாது என சங்-பரிவார மாணவ அமைப்பினர் போராடி வருகின்றனர்.
மேலும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் , நாங்களும் காவித்துண்டு அணிந்து வருவோம் என கூறி பல கல்லூரிகளில் இந்துத்துவ மாணவ அமைப்பினர் காவித்துண்டுகளை அணிந்து ஜெய்ஸ்ரீராம் முழக்கமிட்டு ஒரு மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.இதனால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கர்நாடகா மாநிலம், சிவமோகா மாவட்டத்தில் பர்ஸ் கிரேட் என்ற அரசு கல்லூரியில் சங்-பரிவார மாணவ அமைப்பினர் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியகொடி ஏற்றும் கம்பத்தில் காவிக்கொடியை ஏற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.