கர்நாடக மாநிலத்தில் கோர்கா பழங்குடி இனத் தைச் சேர்ந்த மக்கள் தூய்மைப் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். டிசம்பர் 1-ஆம் தேதி 25-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர் கள் உடுப்பி சிஎம்சி-யிலிருந்து பைந்தூருக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பைந்தூருக்கு குடிபெயர்ந்த கோர்கா பழங்குடியினர்க்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழங்குடியினர்க்கு வாடகைக்கு வீடு தரமுடியாது என வீட்டு உரிமையாளர்கள் துரத்தியுள்ள னர். வீடு வழங்கிய சில வீட்டு உரி மையாளர்களும் சாதி தெரிந்த பின் இரண்டு நாட்களுக்குள் வீட் டைக் காலி செய்ய வைத்துள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த சாதி பாகுபாட்டினால் ஒடுக்கு தலுக்கு உள்ளான தூய்மைப் பணியாளர்கள், உடுப்பியிலி ருந்து பைந்தூருக்கு 100 ரூபாய் செலவழித்து, 70 கிலோ மீட்டர் தினமும் பயணித்து வருகின்றனர். அதிகாலை 3 மணிக்கு வேலை துவங்க வேண்டிய இந்தப் பணி யாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தப் பிரச்சனை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவர பைந் தூரில் உள்ள மாற்றுத் திறனாளி களுக்கான தங்குமிடங்களில் தூய்மைப் பணியாளர்களைத் தங்க வைப்பதற்கான நடவடிக்கை களை உடுப்பி துணை ஆணை யர் வித்யாகுமாரி துவங்கியுள்ளார்.
பைந்தூரை சுத்தமாக வைப்ப தற்காக வருகை தந்த கோர்கா பழங்குடியினர்க்கு அப்பகுதி மக்களே சாதி பெயரால் வீடு வாட கைக்கு அளிக்க மறுத்த சம்பவம் கடும் அதிர்ச்சி அலையை ஏற் படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விரை வில் விசாரணைக்கு எடுக்க உள்ள தாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.