states

img

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் - இன்று வாக்குப் பதிவு!

பெங்களூரு, மே 9 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்  பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், புத னன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் துவங்கும் இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. 173 பொதுத்தொகுதிகள், 36 தனித்  தொகுதிகள், 15 பழங்குடியினர் தொகுதி கள் என மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 அன்று ஒரேகட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13 துவங்கி 20-ஆம் தேதி வரை  நடைபெற்றது. ஏப்ரல் 21 அன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை, ஏப்ரல்  24 அன்று வேட்புமனு மீதான வாபஸ்  முடிந்தவுடன், 2 ஆயிரத்து 615 பேர் களைக் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளி யிட்டது. பாஜக- 224, காங்கிரஸ்- 223,  மஜத- 217 தொகுதிகளில் வேட்பாளர் களை நிறுத்தின. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட  அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை களும் போட்டியில் இருந்தனர். தத்தமது கட்சி வேட்பாளர் களுக்காக, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா, முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் தலை வர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்த ராமையா, டி.கே. சிவகுமார், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர், கடந்த 15 நாட்களாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ரூ. 375 கோடி பரிசுப் பொருட்கள், பணம் பறிமுதல்

ஆளும் பாஜக பணத்தை தண்ணீ ராக செலவிட்டது. தேர்தலையொட்டி பறக்கும் படையிடம் பிடிபட்ட ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களின் மதிப்பு மட்டும் ரூ. 375 கோடியைத் தொட்டது. இதில், ரொக்கப்பணம் மட்டும் ரூ. 147 கோடியாகும். பரிசுப் பொருட்களின் மதிப்பு ரூ. 25 கோடி. மதுபானங்களின் மதிப்பு ரூ. 83 கோடி. போதைப்பொருட்களின் மதிப்பு ரூ. 23 கோடி. தங்கம், வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ. 96 கோடி. இந்த பறிமுதல்கள் தொடர்பாக 2896 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பண விநியோகம்

இவ்வளவையும் மீறி, பிரச்சா ரத்தின் கடைசி நாளில் கூட பாஜக-வினர் வாக்காளர்களுக்கு விடிய விடிய பணம் விநியோகித்தனர். குறிப்பாக, கல்புர்கி தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பாஜக எம்எல்ஏ தத்தரேயா பாட்டில் ரேவூரின் ஆதரவாளர்கள் பணம் விநியோகித்த போது, தேர்தல் அதிகாரி குருகர் அங்கு விரைந்து சென்றார். அப்போது தேர்தல் அதிகாரியை பார்த்ததும் பாஜக நிர்வாகிகள் தப்பி ஓட முயற்சித்தனர். எனினும், அவர்கள், பேருந்து நிலை யத்தில் கையும் களவுமாகபிடிபட்டனர்.  இவ்வாறு திங்களன்று மாலை யுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், புத னன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்குகிறது. தொடர்ந்து மாலை  6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  இத்தேர்தலில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.  தேர்தலையொட்டி, மாநில போலீ சாருடன் துணை ராணுவப்படை, ஆயு தப்படை, எல்லை பாதுகாப்பு படை யைச் சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு படைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மே 13 அன்று நடைபெறுகிறது.