states

img

பேருந்து நிலையத்தை புல்டோசர் கொண்டு தகர்ப்பதாக பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு

மசூதி வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிலையத்தை, புல்டோசர் கொண்டு தகர்க்கப்படும் என்று பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கர்நாடகாவின் மைசூரில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில், மசூதிகளில் இருப்பது போல குவிமாடங்கள் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா, ”அந்த பேருந்து நிலையத்தில் 2,3 நாட்களில் தகர்க்க வேண்டும். இல்லையென்றால் நானே புல்டோசரை கொண்டு தகர்த்துவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.
பிரதாப் சிம்ஹாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு, சமூக செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.