states

img

கர்நாடகா : மதரசாவில் அத்துமீறி நுழைந்து இந்து மத சடங்களைச் செய்த 4 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் தசரா ஊர்வலத்தின் போது சிலர் அத்துமீறி மஹ்மூத் கவான் மதரசாக்குள் நுழைந்து இந்து மத சடங்களைச் செய்து ’ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷமிட்டவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பிதாரில் பழைமை வாய்ந்த மஹ்மூத் கவான் மதரசா, 1460களில் கட்டப்பட்டது. இந்த மதரசா தேசிய முக்கியத்துவம் பெற்ற நினைவுச்சின்னங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தசரா ஊர்வலத்தின் போது சிலர் அத்துமீறி மதரசாக்குள் நுழைந்து இந்து மத சடங்களைச் செய்து ’ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் ’இந்து தரம் ஜெய்’ என்று கோஷமிட்டனர். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததோடு, அக்டோபர் 7-ஆம் தேதி கைது செய்யப்படாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இஸ்லாமிய அமைப்புகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் 4 பேர் மட்டுமே கைது செய்துள்ளனர்.

;