கர்நாடகாவில் புதிதாக 24 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.
கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மை பாஜக-விடும் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த 20-ம் தேதி கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும், 8 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில், இன்று புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பாட்டீல், ஷிவானந்த் பாட்டில், மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா, உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.