பெங்களூரு, ஜூன் 15- மேகதாது அணை விவ காரத்தில் தலையிட தமிழ கத்துக்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் பசவ ராஜ் பொம்மை தெரிவித்துள் ளார். மேகதாது அணை விவ காரத்தில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந் தார். இந்நிலையில் மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசி யல் செய்வதாக கர்நாடக முதல மைச்சர் பசவராஜ் பொம்மை கூறி யுள்ளார். இது தொடர்பாக பெங்களூரு வில் செய்தியாளர்களை சந் தித்து பேசிய அவர், இதுவரை 15 கூட்டங்கள் நடைபெற்றுள்ள தாகவும், இதுவரை எதிர்ப்பு தெரி விக்காமல் இறுதி கட்டத்தில் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவிப்ப தாகவும் கூறினார். தங்கள் நீர் உரிமை மீது தமிழ்நாடு தொடுக் கும் போர் என்றும் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். இதனிடையே, மேகதாது வில் அணை கட்டுவதால் தமிழ் நாடு பயன்பெறும் என கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். எங்கள் நீர் எங்கள் உரிமை என கூறிய அவர், எங்கள் இடத்தில் அணையை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்க முடியாது என்றும் தெரி வித்தார்.