பைஜுஸ் என்ற ஆன்லைன் கல்வி நிறுவனம் கர் நாடக மாநிலம் பெங்க ளூருவை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. எல்கேஜி முதல் இந்திய குடிமைப்பணி வரையிலான பாடத்திட்டங்கள் மற்றும் பயிற்சிகளை இலவசமாகவும் (சில பிரிவுகள்), கட்ட ணச் சேவையாகவும் வழங்கி வரும் இந்த பைஜுஸ் நிறுவனம் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 9,000 கோடி ரூபாயை அந்நிறுவனம் அனுப்பிய தாக புகார் எழுந்துள்ளது. இந்த புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பைஜுஸ் நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணைக்கு தயார்
அமலாக்கத்துறை நோட்டீஸ் தொடர் பாக விளக்கம் அளித்துள்ள பைஜுஸ் நிறு வனம்,”9,000 கோடி ரூபாய் முறைகேடு விவகாரம் உண்மையற்றது. இதுகுறித்து விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம்” எனக் கூறியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பைஜுஸ் நிறுவனத்தின் சிஇஓ ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக் கத்துறை சோதனை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.