states

img

பெங்களூரில் ஆர்பாட்டம் நடத்த தடை; காவல்துறை ஆணையர் உத்தரவு

கர்நாடகா முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பெங்களூரு நகரில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 2 வாரங்களுக்கு  தடை விதித்து பெங்களூர் காவல்துறை ஆணையர் கமல் பண்ட் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியகூடாது என வலியுறுத்தி சங்-பரிவார மாணவ அமைப்பினர் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டங்களின் போது காவித்துண்டு அணிந்து கொண்டு பல இடங்களில் ஜெய்ஸ்ரீராம் என முழக்கமிட்டு ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் கர்நாடகா முழுவதும் மதப்பதற்றத்தை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், பல கல்லூரிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்த சூழ்நிலையில்  பிப்ரவரி-11 வரை மூன்று நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார்.

மேலும், கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் 2 வாரங்களுக்கு கூட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதித்து பெங்களூர் காவல்துல்துறை ஆணையர் கமல் பண்ட் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களிலிருந்து 200 மீட்டர் வரை  கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.