states

img

கர்நாடகாவில் 20 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து 7 பேர் பலி  

கர்நாடகாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.  

கர்நாடகா மாநிலம் பெலகாயி நகருக்கு 11 பேர் கொண்டு குழு ஒன்று, ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்யாழா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த 20 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 11 பேரில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேரை மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.  

முதல்கட்ட விசாரணையில், ஓட்டுநர் ஜீப்பை அதிவேகமாக ஓட்டியதால், ஜீப் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;