கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பாவகடா அருகே எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்2 மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் பலியாகினர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.