states

img

ஒடிசா: ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

ஒடிசாவில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள பீஜா ரயில் நிலையத்திலிருந்து  40 கிலோமீட்டர் தொலைவில் இரும்புத்தாது ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் 6  பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்ட வில்லை. ஆனால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக விசாகப்பட்டினம் கிரண்டுல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன.