states

img

ஒடிசா: சாலை விபத்தில் 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்  

ஒடிசாவில் கார் டிரக் மீது விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

ஒடிசாவின் காலாஹண்டி மாவட்டத்தில் உள்ள கேசிங்கா காவல் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை 217 துர்லகாமன் அருகே நேற்று இரவு கார், டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. போலங்கிர் மாவட்டத்தில் உள்ள பிபால்பதாரிவ் இருந்து திருமண விழாவில் பங்கேற்ற 11 பேர் சிசெகேலாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு  வாகனத்தில் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது நெல் ஏற்றிச் சென்ற டிரக் மீது எஸ்யூவி என்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கேசிங்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  காயமடைந்த 7 பேரில் ஒரு குழந்தை புர்லாவில் உள்ள விம்சாம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  

அதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.