states

img

ஒடிசாவில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து 4 பேர் பலி  

ஒடிசாவில் எண்ணெய் லாரி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து வெடித்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.  

ஒடிசா மாநிலத்தின் பாரதீப் நகரில் இருந்து நயாகர் பகுதி நோக்கி பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. அப்போது இன்று அதிகாலை நயாகர் பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எண்ணெய் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து குஸ்மி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இதைக் கண்ட மற்றொரு லாரியில் இருந்த ஒருவர் ஆற்றில் விழுந்த லாரியில் இருந்தவர்களை மீட்பதற்காகச் சென்றார். ஆனால், திடீரென எரிபொருள் நிரம்பியிருந்த லாரி வெடித்து சிதறியது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.

இதையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

;