states

img

போலிச்சான்றிதழ் விவகாரத்தில் விழிக்கும் ஒடிசா அரசு

பிஜு ஜனதாதளம் ஆளும் ஒடிசா மாநி லத்தில் போலிச்சான்றிதழ்கள் மூலம்  அரசுப் பணியிடங்களில் பலர் வேலையில் சேர்ந்துள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணையில் 4 பள்ளி ஆசி ரியர்களை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளது அம்மாநில அரசு.

பணிநீக்கம் செய்யப்பட்ட 4 அரசு  ஆசிரியர்களும் பூரியின் கிருஷ்ணபிர சாத் பகுதியில் போலி கல்விச் சான்றி தழ்களைத் தயாரித்து மோசடியாக வேலை வாங்கியுள்ள நிலையில், இவர்  களுக்கு போலி கல்விச் சான்றிதழ் தயா ரித்து கொடுத்த கும்பலை கைது செய் தால்தான், மாநிலம் முழுவதும் எத்தனை பேர் போலிச்சான்றிதழ்கள் மூலம் அரசு வேலையை பெற்றுள்ளனர் என்ற விப ரம் தெரியவரும் என காவல்துறை குற்றப்  பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித் துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே  போலிச்சான்றிதழ்கள் நியமனம் தொடர்  பாக 4 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்  பட்ட நிலையில், ஒடிசாவில் ஆசிரியர்  நியமனத்தில் ஆளுங்கட்சி மூலமாக  பிரம்மாண்ட ஊழல் அரங்கேறியுள்ள தாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் அரசு இதுதொடர்பாக எவ்வித விளக்க மும் அளிக்காமல் உள்ள நிலையில், போலிச்சான்றிதழ் விவகாரம் வர விருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆளும்  பிஜு ஜனதாதளத்திற்கு பலத்த பின்ன டைவை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.