states

img

ஒடிசா: பேருந்து கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

ஒடிசாவில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
மேற்கு வங்கத்தில் இருந்து சுமார் 76 பயணிகளுடன் ஒடிசாவின் கஞ்சம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள டேரிங்பாடிக்கு சென்றுவிட்டு விசாகப்பட்டினம் நோக்கி வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து   எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரேக் செயலிழந்ததால் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

;