மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆன பின்பு மணிப் பூர் மாநிலத்தை போன்று மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் வகுப்புவாத வன்முறை சம்பவங் கள் தீவிரமடைந்து வருகின்றன. 3 நாட்களுக்கு முன் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் கோலாப் பூரில் பாஜக தலைமையிலான இந்துத் துவா குண்டர்கள் மசூதி மீது தாக்கு தல் நடத்தியும், முஸ்லிம் மக்க ளின் வீடுகளை தீவைத்தும் கொளுத்தினர்.
இந்நிலையில், பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தில் கிறிஸ் தவ பிரார்த்தனை கூட்டத்தில் இந்துத்துவா குண்டர்கள் தாக்கு தல் நடத்திய சம்பவம் அரங்கே றியது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உத்தரகண்ட் தலை நகர் டேராடூனின் நேரு காலனியில் ஜூலை 14 அன்று ராஜேஷ் பூமி என்ற பாதிரியார் முன்னிலையில் ஒரு வீட்டில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரரும், ஆர்எஸ்எஸ் குண்ட ருமான தேவேந்திர டோபால் தலை மையிலான இந்துத்துவா கும்பல், ”இங்கு மதமாற்றம் நடைபெறு கிறது. அதனால் இனிமேல் பிரார்த்தனை கூட்டம் நடத்தக் கூடாது” என மிரட்டியுள்ளது. “நாங்கள் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை. அமைதியாக பிரார்த்தனை கூட்டம் நடத்துகி றோம். உங்களுக்கு என்ன பிரச் சனை. நீங்கள் யார்? எங்களை பிரார்த் தனை கூட்டம் நடத்தக் கூடாது என சொல்வதற்கு?” என பாதிரியார் ராஜேஷ் பூமி கேள்வி எழுப்பி மறுப்பு தெரிவித்துள்ளார். உடனே இந்துத்துவா குண்டர்கள் பாதிரி யார் ராஜேஷ் பூமி உள்ளிட்டோர் கள் மீது தாக்குதல் நடத்தியது.
உயிருக்குப் பயந்து கிறிஸ்த வர்கள் வீட்டை விட்டு வெளியே ஓடிய நிலையில், வீடுகளின் மீதும் இந்துத்துவா குண்டர்கள் தாக்கு தல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் பாதிரியார் ராஜேஷ் உட்பட 7 பேர் காயமடைந்த நிலை யில், வீடு முற்றிலும் அடித்து நொ றுக்கப்பட்டன.
குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் - தாக்குதல்
பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த குழந்தைகளிடம் இந்துத் துவா குண்டர்கள் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டனர். என்ன நடக்கிறது என்று புரியாமல் சம்பவ இடத்தை விட்டு ஓட முயற்சித்த குழந்தைக ளை இந்துத்துவா கும்பல் தலை யில் அடித்து தாக்குதல் நடத்தி யுள்ளது.
கைது நடவடிக்கை இல்லை
இந்த சம்பவம் தொடர்பாக பாதிரியார் ராஜேஷ், நேரு காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 11 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரார்த் தனை கூட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தேவேந்திர டோபல், பிஜேந்திர தாபா, சதிர் தாபா, சஞ்சீவ் பால், சுதிர் பால், திரேந்திர தோபால், அர்மன் தோபால், ஆர்யமான் தோபால், அனில் இந்து, பூபேஷ் ஜோஷி மற்றும் பிஜேந்திரா என அடை யாளம் காணப்பட்டும் அவர்களை கைது செய்யாமல் போலீசார் இந்துத்துவா கும்பல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதமாற்றம் நடைபெறவில்லை
நேரு காலனி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சத்பீர் சிங் நியூஸ்லாண்ட்ரிக்கு அளித்த பேட்டி யில்,“கிறிஸ்தவ பிராத்தனைக் கூட்டத்தில் எந்த மத மாற்றமும் நடைபெறவில்லை. இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ குடும்ப உறுப்பினர்க ளிடம் தவறாக நடந்து கொண்டு அவர்களது வீட்டை நாசப்படுத்தி யுள்ளனர்” என அவர் கூறினார்.