டேராடூன்:
சாதி - மத மறுப்புத் திருமணங்களுக்கு ரூ. 50 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ரத்துசெய்யும் முடிவுக்கு, உத்தரகண்ட் மாநில பாஜக அரசு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.உத்தரகண்டில் சட்டப்பூர்வமாக பதிவுசெய்து சாதி மறுப்பு அல்லது மதம் கடந்து திருமணம் செய்துகொள்வோருக்கு அரசு ரூ. 50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் ரூ. 10 ஆயிரம் மட்டுமே ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
இதனை கடந்த 2014-ஆம் ஆண்டு, அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு ரூ. 50 ஆயிரமாக உயர்த்தி இருந்தது.ஆனால், திரிவேந்திர சிங்ராவத் தலைமையிலான தற் போதைய உத்தரகண்ட் பாஜக அரசு, சாதி-மத மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க முடியாது என்றும், எனவே, இந்த திருமணங்களுக்கு நிதியுதவி வழங்குவதை நிறுத்தும் முடிவுக்கும் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.ஊக்கத் தொகை வழங்கும்திட்டம் 1976-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு இருந்தாலும், தற்போது மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டதால், இயல்பாகவே பழையதிட்டம் செல்லுபடியாகாது என்றுமாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மதன் கவுஷிக் தெரிவித்துள்ளார்.‘லவ் ஜிகாத்’தில் ஈடுபட்டதற்காக, மக்களை தண்டிக்க வேண்டும். அதற்குப் பதிலாக, உத்தரகண்ட் மாநிலத்தில் அவர் களுக்கு ரூ. 50 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படுகிறது. இதை ஏற்க முடியாது. கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க மற்ற மாநிலங்கள் ‘லவ் ஜிகாத்’ க்கு எதிராக சட்டங்களை உருவாக்கும் போது, உத்தரகண்ட் மாநிலம்மட்டும் மத மறுப்புத் திருமணங்களை ஊக்குவிக்க முடியாது என்று இந்துத்துவா பேர்வழியும், ‘சுதர்சன் டிவி’ முதலாளியுமான சுரேஷ் சவாங்கேவும் கூறியுள்ளார்.