states

img

கேதார் நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

கேதார் நாத் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் குப்தகாசியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேதார்நாத் கோயிலுக்கு 4 பேர் தனியார் ஹெலிகாப்டரில் பயணித்தனர். இதில் 2 மாலுமிகள் இருந்தனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக பாடா என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தகவலை  உத்தரகாண்ட் முதலமைச்சரின் முதன்மை செயலாளர் அபினவ் குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.