ட்விட்டரில் ஜியோ டவுன் (jiodown)என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தபோது பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில். இலவச சேவை, இலவச அழைப்புகள் என பல அடங்கும்.
ஆனால், சிறிது காலத்திற்கு பின்பு சேவைகள் வழங்குவதற்கு கட்டணம் விதிக்கப்பட்டது.அதன்பின் அழைப்புகள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. அப்போதே பயனர்கள் இது சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் ஏற்பாடு என்று உக்தி என பலர் விமர்சனம் செய்திருந்தனர்.
இதனையடுத்து, அவ்வப்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தொலைதொடர்பு சேவையில் தொழிட்நுட்ப ரீதியாக இடையூறுகள் ஏற்படும் பிற்பாடு அது சரி செய்யப்படும்.
இந்நிலையில், இன்று மும்மை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ தொலைதொடர்பு சேவைகள் திடீரென முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும், ஜியோ எண்கள் மூலம் எந்த அழைப்புகளையும் மேற்கொள்ள முடியாததால் ட்விட்டரில் பலரும் ஜியோ குறித்து விமர்சித்து வரும் நிலையில் #jiodown என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.