states

img

அரியானா: தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் மூச்சு திணறல்

அரியானா தொழிற்சாலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததால் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வளிமண்டலத்தில் பரவியுள்ள அம்மோனியா வாயுவை தடுக்க தீயணைப்புத் துறையினர், தங்களது வாகனங்களின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட அதிகாரிகள், மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.