states

img

ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு!

ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். 
ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 5-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் அக்டோபர் 8-ஆம் தேதி வெளியானது. அதன்படி, மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று பெற்றது. இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்றுக்கொண்டார். அம்மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நயாப் சிங் சைனியோடு, அனில் விஜ், கிருஷன் லால் பன்வர், ராவ் நர்பீர், மஹிபால் தந்தா, விபுல் கோயல், அரவிந்த் சர்மா, ஷியாம் சிங் ராணா, ரன்வீர் கங்வா கிருஷ்ணா பேடி, ஸ்ருதி, சவுத்ரி, ஆர்த்தி சிங் ராவ், ராஜேஷ் நகர், கௌரவ் கவுதம் ஆகிய 14 அமைச்சர்களும் இன்று பதவியேற்றனர்.