விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய மேகாலய ஆளுநர் சத்திய பால் மாலிக் மோடி ஒரு திமிர் பிடித்தவர் என்று விமர்சித்துள்ளார்.
அரியானா மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மேகாலய ஆளுநர் சத்திய மாலிக் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய சத்தியபால் மாலிக் மோடி மிகவும் திமிர்பிடித்தவர் என்றும் விமர்சித்துள்ளார். மேலும் விவசாயிகள் நிலை தொடர்பாக பிரதமரிடம் விவரிக்க சென்றிருந்தேன். அப்போது 500 விவசாயிகள் உயிரிழந்தது குறித்து கூறியபோது பிரதமர் மோடி அவர்கள் எனக்காகவா உயிரிழந்தார்கள் என்று கேட்டார். அதற்கு நான் ஆம் நீங்கள் தானே நாட்டை ஆள்கிறீர்கள் என்று சண்டை போட்டு வந்ததாக கூறினார்.