states

img

அசாமில் லேசான நிலநடுக்கம்

அசாமில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
தெற்கு அசாமில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
இதுகுறித்து நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
மணிப்பூரின் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு அருகில் உள்ள கச்சார் மாவட்டத்தில் காலை 11.03 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை