states

img

முஸ்லீம்களை மீண்டும் குறிவைக்கும் பாஜக அரசு - அசாமில் ஒரே நாளில் 800 பேர் கைது

பாஜக ஆளும் அசாம் மாநில அரசு முஸ்லீம்  மக்களை குறிவைத்து, “2026ஆம் ஆண்டிற்குள் குழந்தை  திருமணத்தை முற்றிலும் ஒழிப்  போம்” என்று (ஏதோ முஸ்லிம்கள் மட்டுமே குழந்தைத் திருமணம் செய்வது போல) கிளம்பியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் குழந்தை திருமணம் செய்ததாகவும், திரு மணத்திற்கு உடந்தையாக இருந்த தாக கூறி சில மத குருக்களை கைது செய்தது. கிட்டத்தட்ட 5000-க்கும் மேற்பட்டோரை கைது செய்தும், 4,135 வழக்குகளையும் பதிவு செய்  தது. குறிப்பாக காதல் திருமணம் செய்த இளைஞர்களை வீட்டிலி ருந்து அடாவடியாக அடித்து இழுத்துச் செல்லும் கைது நடவ டிக்கையை அசாம் போலீசார் அரங்கேற்றினர். இந்த குழந்தை திருமண தடுப்பு  நடவடிக்கை மூலம் கைது செய் யப்பட்டவர்கள் 95 சதவீதம் பேர் முஸ்லீம் மக்கள் என்பதால் அசாம் பாஜக அரசின் நடவடிக்கை மீது  பலத்த சந்தேகங்களும், கண்ட னங்களும் கிளம்பியது. கண்ட னங்கள் பல குவிந்ததால் குழந்தை திருமண தடுப்பு நடவடிக்கையை கைவிட்டார் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா. இந்நிலையில், புதனன்று மீண்டும் குழந்தை திருமண தடுப்பு  நடவடிக்கையை கையிலெடுத்த அசாம் அரசு, ஒரே நாளில் 800க்கும்  மேற்பட்டோரை கைது செய்துள்  ளது. எனினும் கைது செய்யப்பட்ட வர்கள் விபரங்களை அசாம் போலீ சார் வெளியிடவில்லை. 3000 பேரை  கைது செய்வேன் அசாம் கைது நடவடிக்கை தொடர்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,”குழந்தை திருமணத்திற்கு எதிரான ஒடுக்கு முறையில், அதிகாலையில் தொடங்கிய சிறப்பு நடவடிக்கை யில் 800-க்கும் மேற்பட்டவர்களை அசாம் காவல்துறை கைது செய்  துள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு, குழந்தை திருமணத்திற் காக அசாமில் 5,000 பேரை கைது செய்தேன். ஜி-20 கூட்டத்தின் முடி விற்கு நான் காத்திருந்தேன். குழந் தைத் திருமணம் தொடர்பாக மேலும் 2,000–3,000 ஆண்களை கைது செய்வேன். இதன்மூலம் குழந்தை திருமணத்தை அசாமில் ஒழிப்பேன்” என நியாயவான் போல பேசியுள்ளார்.