இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில மாநாடு மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில், மதச்சார்பற்ற இந்தியா மற்றும் வேலை வாய்ப்பு உரிமையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தோடு மே 12 முதல் – 15 வரை சால்ட் லேக், மேற்கு வங்காளம். டியாகோ மரடோனா நகரில் நடைபெற்றது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
பிரதிநிதிகள் மா0நாடு வெள்ளியன்று(மே 13) தொடங்கியது.இந்திய மொழிகளின் சங்கமாக விண்ணதிரும் முழக்கத்துக்கிடையே பி.ஏ.முகமது ரியாஸ் கொடியேற்றினார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதிலிருந்தும் 502 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் இளைஞர்களின் நலனை பாதுகாக்கும் பொருட்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், மாநாட்டின் நிறைவு நாளான இன்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக ஏ.ஏ.ரஹிம், பொதுச்செயலாளராக ஹிமன்ராஜ் பட்டாச்சார்யா, பொருளாளராக சஞ்சீவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.