பஞ்சாபில் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் அரசு இன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், அரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றினால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் எனத் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் பரவிவரும் சூழலில் பஞ்சாப் மாநில அரசின் இந்த கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.