states

ரங்கசாமி அரசை ஓரம்கட்டிவிட்டு ஆளுநரே முடிவுகளை எடுப்பதா? சிபிஎம் கண்டனம் 

புதுச்சேரி, ஜூன் 15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி  என்பது பாஜக வின் காட்டாட்சியாக நாளுக்கு நாள் மாறி வருவதை மக்கள் பேசத் துவங்கி யுள்ளனர். மத்தியல் ஆளும் பாஜகவுக்கு ஒத்திசை வான ஒரு அரசு புதுவையில் அமைந்தால் புதுச்சேரி  மாநில வளர்ச்சி பெறும், மாநில அந்தஸ்து கிடைக் கும், தாராளமாக நிதி கிடைக்கும்,பொருளாதார ரீதி யாக வளம் பெறும், தொழில் வளரும், மூடப்பட்ட பஞ்சாலைகள் திறக்கப்படும், வேலைவாய்ப்பு பெருகும், ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அத்தியா வசிய பொருட்கள் தடையின்றி வழங்கப்படும்,  மின்துறை தனியாருக்கு அனுமதிக்கப்படாது என்று மக்களை நம்ப வைத்து பதவிக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசில் ரங்கசாமி முதல மைச்சர் என்று சொன்னாலும், பெயரளவுக்கு தான்  அவர் முதலமைச்சராக செயல்படுகிறார்.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும் போது, எல்லா முடிவுகளும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்  பட்ட துணைநிலை ஆளுநர் எடுக்கும் அவலம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய இழுக்கு. அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டு நிறைவு செய்துள்ள நிலையில், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கவில்லை, பாரம்பரியமிக்க ஏ.எப்.டி உள்ளிட்ட  பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை. வேலையின்மை புதுச்சேரியில் அதிகரித்துள்ளது.

கஞ்சா பொட்டலம் விற்கவும்,சமூக விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளதாகல் சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தந்திரமான  ஆட்சி மக்கள் மீது திணிக்கப்படுகிறது.இது  பரவலான மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உரு வாக்கியுள்ளது. இதிலிருந்து  மக்களை திசை திருப்ப  வட மாநிலங்களில் அரங்கேற்றும் வன்முறை, வெறுப்பு அரசியலை சங்பரிவார் கூட்டம் திட்டமிடுகிறது. அதன் உச்சமாக இரண்டு நாட்களுக்கு முன்பு வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்த முத லமைச்சரை, பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சி வாயத்தின் பாதுகாவலர் தள்ளிவிட்டு அவமதித்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். அந்த காவல்துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பாதுகாவலரின் நடவடிக்கையை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்த உள்துறை அமைச்சர் நமச்சி வாயம் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு ராஜாங்கம்  கூறியுள்ளார்.