states

புதுவையில்  தொழிலாளி கொலை

நெட்டப்பாக்கம், டிச. 17- புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் - அந்தராசி குப்பம் பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை (டிச. 16) நள்ளிரவு 12 மணிக்கு ஒரு வாலிபர் கழுத்தை அறுத்தும், மார்பில் கத்திகுத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அவர், கல்மண்டபம் அருகே தமிழகப் பகுதியான அந்தராசி குப்பத்தை சேர்ந்த காமராஜ் (33) என்பதும் அதேப்பகுதியிலுள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு கும்பல் மது குடித்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டதை தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அந்த  கும்பல் காமராஜை கொலை செய்துள்ள தும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக காமராஜ் உடலை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.