புதுச்சேரி, ஜன. 7- புதுச்சேரியில் வருகி 10 ஆம் தேதி முதல் பொங்கல் இலவச பொருட்கள் விநியோகிக்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:- புதுவையில் பொங்கல் பண்டி கையை முன்னிட்டு பச்ச அரிசி, வெல்லம், முந்திரி, உலர் திராட்சை உட்பட 10 பொருட்கள் அடங்கிய ரூ. 490 மதிப்பிலான பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இந்த பொங்கல் பரிசு பொருட்களை வரும் 10ஆம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். மோடி வருகை ரத்து! புதுவையில் தேசிய இளைஞர் விழா வரும் 12ஆம் தேதி முதல் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைப்ப தாக இருந்தது. இப்போது காணொலி யில் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொலியில் விழாவை தொடங்கி வைப்பார். அந்தந்த மாநிலங்களில் இருந்தபடியே இளைஞர்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். புதுவையில் கொரோனா விதிமுறை களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும்.
இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவையில் கூடுதலாக 10 ஆயிரம் முதியோர், விதவைகளுக்கு ஓய்கூதியம் வழங்கப்படும். விடுபட்ட 6 ஆயிரம் பேருக்கும் ஓய்கூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கு ரூ. 36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கனமழையால் சேதமடைந்த புதுவையின் அனைத்து சாலைகளையும் புதிதாக அமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து சாலைகளும் புதிதாக போடப்படும். புதுவையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி கல்லூரி களை மூடுவது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் காவலர் பணியிடங்களை நிரப்ப உடல் தகுதி தேர்வு வரும் 19ஆம் தேதி நடத்தப்படுகிறது. தொடர்ந்து ஐ.ஆர்.பி.என். உட்பட ஆயிரம் காவ லர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.