states

img

புதுவை சட்டப்பேரவையில் பதாகை ஏந்தி போராட்டம்

புதுச்சேரி, மார்ச் 30- புதுச்சேரி அரசை கண்டித்து கோரிக்கை பதாகைகளுடன் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து  வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவையின் இடை க்கால பட்ெஜட் கூட்டத் தொடர் புதனன்று (மார்ச்30) காலை 10 மணிக்கு தொடங்கியதும் 2021-2022 ஆண்டிற்கான கூடுதல் செலவின மதிப்பீடுகளை முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து இடைக்கால நிதிநிலை அறிக்கையையும் முதல்வர் ரங்கசாமியே தாக்கல் செய்தார்.  இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 3,613 கோடிக்கான ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான கூடுதல் செலவினங்களுக்காக உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் பேரவை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.  திமுக வெளிநடப்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சிவா தலைமையில் திமுக உறுப்பினர்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகஜோதி ஆகியோர் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசை கண்டித்து சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர்.  பின்னர் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு வெளிநடப்பு செய்தனர். இதே கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பெரம்பத் ஆகியோரும் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு வெளிநடப்பு செய்தனர்.