மகாராஷ்டிரா,ஜூன் 18- மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் இந்தி 3ஆவது மொழியாகக் கற்பிக்கப்படும் ஆனால் கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இந்தி 3ஆவது மொழியாகக் கற்பிக்கப்படாது என அந்த அறிவிப்பைத் திரும்பப்பெற்றார்.
ஆனால் மீண்டும் பள்ளிகளில் இந்தி 3ஆவது மொழியாக் கற்பிக்கப்படும் ஆனால் கட்டாயமில்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் பலரும், இது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியை திணிக்கும் முயற்சிதான் எனக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.